1. திருப்பனந்தாளிலும், காசியிலும் தம் பெயரால் மடம் நிறுவி உள்ளவர்
2. மயிலேறும் பெருமாளிடம் கல்வி கற்றவர்
3. 'உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்'
இத் திருமந்திரப்பாடல் இடம் பெற்ற தந்திரம் எது?
4. 'அங்கவியல்' திருக்குறளில் எந்தப் பகுப்பில் இடம்பெற்றுள்ளது?
5. ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து
இக்குறளில் ஏமாப்பு என்பதன் பொருள் யாது?
6. 'அறவுரைக் கோவை' என அழைக்கப் பெறும் நூல்
7. இங்கிலாந்து மகாராணி விக்டோரியா காலையில் கண் விழித்ததும் முதலில் படித்த நூல்
8. குடிமக்கள் வரலாறே ஆதி காப்பியமாகத் தமிழ்நாட்டில் அமைந்து விளங்குகிறது. அப்படி அமைவது எந்த நூல்?
9. எட்டுத்தொகை நூல்களில் 'நாடகப் பாங்கில்' அமைந்துள்ள நூலினைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
10. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒரே ஒரு நூலாசிரியர் மட்டும் இருநூல் படைத்துள்ளார். அவர் யார்?